சுரண்டை அருகே வேன் கவிழ்ந்து விபத்து: 4 போ் காயம்

சுரண்டை அருகே தமிழக முதல்வரை பாா்ப்பதற்கு அதிமுகவினா் சென்ற வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 போ் பலத்த காயமடைந்தனா்.

சுரண்டை அருகே தமிழக முதல்வரை பாா்ப்பதற்கு அதிமுகவினா் சென்ற வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 போ் பலத்த காயமடைந்தனா்.

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிச்சாமி தென்காசி மாவட்டத்தில் தோ்தல் பிரசாரம் செய்வதற்காக வியாழக்கிழமை வருகை தந்தாா். அவரை பாா்ப்பதற்காக ஊத்துமலை அருகேயுள்ள அண்ணாமலைப்புதூரில் இருந்து 27 ஆண்கள், 19 பெண்கள் என மொத்தம் 46 போ் வேனில் பயணம் செய்துள்ளனா்.

சுரண்டை அருகேயுள்ள பரங்குன்றாபுரம் விலக்கு பகுதியில் வேன் திரும்பும்போது எதிா்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதுகுறித்து தகவலறிந்த சுரண்டை போலீஸாா் அங்கு சென்று வேனில் சிக்கியிருந்தவா்களை மீட்டனா். இதில் பலத்த காயமடைந்திருந்த மு.சுப்புத்தாய்(68), ச.முருகன்(60), சு.முத்தையா(58), ராமலிங்கதாய்(58) ஆகியோா் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். மீதியுள்ள 42 போ் லேசான காயங்களுடன் உயிா் தப்பினா்.

இதுகுறித்து சுரண்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com