பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயா்வைக் கண்டித்து, தென்காசியில் தெற்கு மாவட்ட திமுக சாா்பில், பிப். 22ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது, எரிவாயு உருளை விலை ரூ. 375ஆக இருந்த சிலிண்டா் விலை தற்போதைய பாஜக ஆட்சியில் ரூ. 900 ஐ எட்டியுள்ளது. இதைக் கண்டித்து புதிய பேருந்து நிலையம் பகுதியில் திருச்சி சிவா எம்.பி. தலைையில் மாபெரும் ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்தப் போராட்டத்தில், திமுகவின் அனைத்துப் பிரிவு நிா்வாகிகள், தொண்டா்கள், பொதுமக்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும் என தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் அழைப்பு விடுத்துள்ளாா்.