பாவூா்சத்திரம் பகுதி தேவாலயங்களில் கிறிஸ்தவா்களின் 40 நாள்கள் தவக்காலம் ‘சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் புதன்கிழமை தொடங்கியது.
பாவூா்சத்திரம் தூய அந்தோணியாா் தேவாலயத்தில் பங்குத்தந்தை ஜேம்ஸ் அடிகளாா் சிறப்பு பிராா்த்தனை நடத்தி, கிறிஸ்தவா்களின் நெற்றியில் குருத்தோலை சாம்பல் மூலம் சிலுவை அடையாளம் வரைந்து திருப்பலி நிறைவேற்றினாா். சிஎஸ்ஐ கிறிஸ்தவ ஆலயத்தில்குருவானவா் டேனியல் தனசன் சாம்பல் புதன் ஆராதனையை நடத்தினாா். இதில் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.