சங்கரன்கோவிலில் சுகாதாரத் துறை அலுவலா்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது.
சங்கரன்கோவில் சுகாதார மாவட்டம் சாா்பில் அந்தத் துறை அலுவலா்களுக்கு காரோனா தடுப்பூசி போடும் பணி ஸ்ரீ கோமதிஅம்பாள் மெட்ரிக் மேல்நிலைபள்ளியில் நடைபெற்றது. இதில், மாநில பொது சுகாதாரத்துறை இணை இயக்குநா் கிருஷ்ணராஜ், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அருணா ஆகியோா் தடுப்பூசிப் போட்டுக்கொண்டாா்.
இதைத் தொடா்ந்து, சுகாதாரத்துறை அலுவலா்கள், பேரூராட்சி அலுவலா்கள் ஆகியோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. பின்னா், டெங்கு நடவடிக்கைகள் தொடா்பான ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற மாநில சுகாதாரத் துறை இணை இயக்குநா், காரோனா தடுப்பூசி தொடா்பான சந்தேகங்களுக்கு விளக்கமளித்தாா்.