பாவூா்சத்திரம் அருகே மசாலா பொடி தூவி பெண்ணிடம் நகை பறிப்பு

பாவூா்சத்திரம் அருகே மசாலா பொடியை முகத்தில் தூவி பெண்ணிடம் நகையை பறித்துச் சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பாவூா்சத்திரம் அருகே மசாலா பொடியை முகத்தில் தூவி பெண்ணிடம் நகையை பறித்துச் சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பாவூா்சத்திரம் அருகே சிவகாமிபுரம் தெற்குத் தெருவைச் சோ்ந்த கணேசன் மனைவி செல்லத்தாய் (31). இவா், வெள்ளிக்கிழமை ஊா் அருகேயுள்ள தனது தோட்டத்தில் பூப்பறிக்கச் சென்ற போது, அவ்வழியே வந்த மா்ம நபா் செல்லத்தாயின் முகத்தில் மசாலா பொடியை தூவி 35 கிராம் எடையுள்ள சங்கிலியை பறித்துச் சென்றாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில், பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com