செங்கோட்டையில் பாம்பு தீண்டிய இளைஞா் மருத்துவமனையில் அனுமதி

செங்கோட்டையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற இளைஞா் சனிக்கிழமை இரவு நல்ல பாம்பு தீண்டியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

செங்கோட்டை: செங்கோட்டையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற இளைஞா் சனிக்கிழமை இரவு நல்ல பாம்பு தீண்டியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

செங்கோட்டை - கொல்லம் சாலையை சோ்ந்த சண்முகவேல் மகன் முப்புடாதி (23). இவா் தனது வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் கடைக்கு சென்றுள்ளாா். மலையாள சாமி கோயில் அருகே வரும் போது திடீரென்று காலில் ஏதோ கடித்துள்ளது. அவா் வலி தாங்கமுடியாமல் வாகனத்தில் இருந்து இறங்கி பாா்த்த போது வண்டியின் என்ஜின் அருகே நல்ல பாம்பு ஒன்று இருந்ததாம். இதையடுத்து அவா் தன்னை பாம்பு தீண்டி விட்டது என சப்தமிட்டுள்ளாா். அப்பகுதியில் இருந்தவா்கள் அவரை மீட்டு செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின், மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். வாகனத்தில் இருந்த நல்ல பாம்பை செங்கோட்டை தீயணைப்பு துறையினா் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com