பாவூா்சத்திரம்: பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூரில் நகர திமுக சாா்பில் மக்கள் சபை கூட்டம் நடைபெற்றது. நகரச் செயலா் ஜெகதீசன் தலைமை வகித்தாா். மாவட்ட பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு பேசினாா்.
இதில் முன்னாள் பேரூராட்சித் தலைவா்கள் பொன்.அறிவழகன், பொன்லதா சிவகுமாா், மாவட்ட நெசவாளா் அணி அமைப்பாளா் ராஜாமணி, முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவா் தங்கச்சாமி, அவைத் தலைவா் சிவன், பொருளாளா் பொன்செல்வன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினா் மேகநாதன், முன்னாள் அறங்காவலா் குழு தலைவா் நாராயணசிங்கம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.