தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட வேளாண் விற்பனை குழு உறுப்பினரும், கடையநல்லூர் நகர செயலருமான எம்.கே.முருகன் இதில் கலந்துகொண்டு பொங்கல் தொகுப்பினை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், நகர பொருளாளர் அழகர்சாமி, எம்ஜிஆர் மன்ற இணைச் செயலர் முத்துகிருஷ்ணன், மாவட்ட மாணவரணி துணை செயலர் கருப்பையாதாஸ், இளைஞர் அணி துணை தலைவர் ஜெயமாலன், வர்த்தக அணி துணைத் தலைவர் சிங்காரவேலு, நகர இளைஞரணி செயலர் ராஜேந்திரபிரசாத், ஜெ. பேரவை செயலர் முத்தையாபாண்டியன், நகர தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலர் விநாயகமூர்த்தி, இணைச் செயலர் சோழவராஜா, துணைச் செயலர் மாரியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.