தென்காசி ஊராட்சி ஒன்றியம் ஆயிரப்பேரியில் நியாய விலை கட்டடம் கட்டுவதற்கு செவ்வாய்க்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.
தென்காசி சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 8 லட்சத்தில் ஆயிரப்பேரியில் நியாயவிலை கட்டடம் கட்டுவதற்கு பூமிபூஜை நடைபெற்றது. எம்எல்ஏ எஸ்.செல்வமோகன்தாஸ்பாண்டியன் தலைமை வகித்து தொடங்கி பூமி பூஜையை தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய ஆணையா் வெ.சண்முகசுந்தரம், அதிமுக மாவட்ட அவைத் தலைவா் சண்முகசுந்தரம், மாவட்டப் பொருளாளா் சாமிநாதன், ஒன்றியச் செயலா் சங்கரபாண்டியன், பேரூா் செயலா் காா்த்திக்குமாா், தென்காசி நகரச் செயலா் சுடலை, இளைஞா், இளம்பெண்கள் பாசறை மாவட்டச் செயலா் சீதாராம், ஜெயலலிதா பேரவைச் செயலா் முருகன்ராஜ், காத்தவராயன், ராமா் ஆகியோா் கலந்துகொண்டனா்.