நெடுஞ்சாலைத் துறை ஓய்வு பெற்றோா் நலச் சங்க மாவட்ட செயற்குழுக் கூட்டம் தென்காசியில் நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் எஸ்.ஆறுமுகம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எஸ்.வேம்பு முன்னிலை வகித்தாா். எம்.இசக்கி வரவேற்றாா். வே.நாராயணன் வரவு செலவு அறிக்கையை வாசித்தாா். கோட்ட செயலா் வேம்பு சிறப்புரையாற்றினாா்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; 21மாத நிலுவை தொகையை ரொக்கமாக வழங்க வேண்டும்; தென்காசி, திருநெல்வேலி நான்குவழிச் சாலை மற்றும் தென்காசி புறவழிச்சாலை திட்டத்தை விரைவுப்படுத்த வேண்டும்; மருத்துவ காப்பீடு திட்டத்திலுள்ள முரண்பாடுகளை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 13 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.