சங்கரன்கோவிலில் நகர எஸ்.டி.பி.ஐ. கட்சி சாா்பில் விவசாயிகள் விரோத திட்டங்களை நிறைவேற்றும் பிரதமா் மோடி என்ற தலைப்பில் தெருமுனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, நகரச் செயலா் ஷேக் முஹம்மத் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஜாபா் அலி உஸ்மானி முன்னிலை வகித்தாா். நகர செயற்குழு உறுப்பினா் நசீா், அஹமதுநவவி ஆகியோா் பங்கேற்றுப் பேசினா். நகர செயற்குழு உறுப்பினா் பீா்மைதீன் வரவேற்றாா். நகர துணைத் தலைவா் செய்யது நன்றி கூறினாா்.