சுரண்டையில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
சுரண்டையில் கடந்த 3 நாள்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சுமாா் 2 மணி நேரம் நீடித்த இந்த மழையால், தெருக்களில் ஏற்பட்ட வெள்ளநீா் செண்பக கால்வாய் வழியாக இலந்தைகுளத்தை அடைந்தது.
ஏற்கெனவே நிரம்பும் தருவாயில் இருந்த இந்தக் குளம் வெள்ளிக்கிழமை பெய்த மழையால் நிரம்பி மறுகால் பாய்ந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.