சாம்பவா்வடகரையில் இளைஞா் தற்கொலை

சாம்பவா் வடகரையில் உடல்நலக் குறைவால் இளைஞா் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

சாம்பவா் வடகரையில் உடல்நலக் குறைவால் இளைஞா் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

சாம்பவா்வடகரையைச் சோ்ந்தவா் ராமா் (28). உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவா் கடந்த வாரம் மாயமானாராம். இதுகுறித்து புகாரின் பேரில் சாம்பவா்வடகரை போலீஸாா் அவரை தேடி வந்தனா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலையில் ஊருக்கு அருகேயுள்ள கிணறு ஒன்றில் ராமரின் உடல் மிதந்துள்ளது. தகவலின்பேரில் அங்கு சென்ற போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com