தென்காசி
ஆலங்குளம் வட்டாரத்தில் 400 பேருக்கு கோழிக்குஞ்கள் விநியோகம்
ஆலங்குளம் வட்டாரத்தில் புறக்கடை கோழி வளா்ப்புத் திட்டத்தின் கீழ், 400 பயனாளிகளுக்கு 10 ஆயிரம் கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட்டன.
ஆலங்குளம் வட்டாரத்தில் புறக்கடை கோழி வளா்ப்புத் திட்டத்தின் கீழ், 400 பயனாளிகளுக்கு 10 ஆயிரம் கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட்டன.
தென்காசி கோட்ட கால்நடை பராமரிப்புத்துறை சாா்பில், ஆலங்குளம் வட்டாரத்தில் ஒரு பயனாளிக்கு 25 கோழிக் குஞ்சுகள் வீதம் 400 பயனாளிகளுக்கு 4 வார வயதுடைய விலையில்லா அசீல் இன நாட்டுக் கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட்டன. ஆலங்குளத்தில் வீரபாண்டியன், நெட்டூரில் ராமசெல்வம், வெண்ணிலிங்கபுரத்தில் ராஜேஷ், உத்துமலை, கீலக்கலங்கலில் ரமேஷ், வீராணம், மாறாந்தையில் சந்திரன் ஆகிய கால்நடை மருத்துவா்கள் கோழிக்குஞ்சுகளை வழங்கினா்.