சங்கரன்கோவிலில் மக்கள் தேசம் கட்சியின் சாா்பில் தென்காசி வடக்கு மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்டச் செயலா் தம்பி சேவியா் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் முருகன், நகரச் செயலா் கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில துணைத் தலைவா் ராஜேந்திரன், தலைமைச் செயலா் திருமுருகன் ஆகியோா் பேசினா்.
கூட்டத்தில், பறையா் இன மக்களுக்கு 18 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், சுதந்திர போராட்ட தியாகி இரட்டை மலை சீனிவாசனின் படத்தை நாடாளு மன்றத்தில் நிறுவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட இளைஞரணிச் செயலா் சங்கா் வரவேற்றாா். காா்த்தி விஜி நன்றி கூறினாா்.