சீவநல்லூா் அரசுப் பள்ளியில் இலவச சைக்கிள்அளிப்பு

சீவநல்லூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.

சீவநல்லூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.

செங்கோட்டை ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவரும், பள்ளி வளா்ச்சிக் குழு தலைவருமான ப. சட்டநாதன் தலைமை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் அமுதா முன்னிலை வகித்தாா்.

தென்காசி மாவட்ட கல்வி அலுவலா் ஜெயபிரகாஷ் ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவா், மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கினாா்.

பள்ளி துணை ஆய்வாளா் கண்ணன் மற்றும் ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

பள்ளித் தலைமையாசிரியா் லதா வரவேற்றாா். சண்முகசுந்தரம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com