தென்காசி மாவட்டத்தில் ஜன. 15, 26, 28 ஆகிய தேதிகளில மதுக்கடைகளை மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து மதுபானக்கடைகள் மற்றும் அதனுடன் செயல்படும் மதுபானக் கூடங்கள், தங்கும் விடுதியுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் ஆகியவைகள் திருவள்ளுவா் தினம் (ஜன. 15), குடியரசு தினம் (ஜன.26), வள்ளலாா் நினைவு தினம் (ஜன.28) ஆகிய தேதிகளில் மூடப்பட்டிருக்கும். அன்றைய தினம் மதுபானம் விற்பனை ஏதும் நடைபெறாது என்று தெரிவித்துள்ளாா் .