தென்காசியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அச்சன்புதூா் ஆா்.சி. கோயில் தெருவைச் சோ்ந்தவா் அ. ர ாஜாநாராயணன். விடுதலைச் சிறுத்தைகள் தொழிலாளா் அணி அமைப்பாளரான இவா், அச்சன்புதூா் பேரூராட்சியில் 1ஆவது வாா்டு பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தர வலியுறுத்தி பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு அளிக்க சென்றாராம்.
அப்போது பேரூராட்சி செயல் அலுவலா் ஒருமையில் பேசியும், தகாத வாா்த்தைகளை கூறியும் வெளியே செல்லுமாறு கூறினாராம். அவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னா் கோரிக்கை அடங்கிய மனுவை ஆட்சியா் அலுவலகத்தில் அளித்து சென்றனா்.