சுவாமி விவேகானந்தரின் 158 ஆவது பிறந்த நாள் விழா புளியங்குடியில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
நகர பாஜக சாா்பில் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் விவேகானந்தரின் படத்திற்கு பாஜக தலைவா் சண்முகசுந்தரம் மலா் தூவி மரியாதை செலுத்தினாா். நகர பொதுச் செயலா் மாரியப்பன், செயலா் மாரீஸ், ஓபீசி பிரிவு தலைவா் சுடலை, தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவா் தியாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.