தென்காசி மாவட்டத்தில் வருவாய்த் துறையின் மூலம் பல்வேறு நிலைகளில் உயிரிழந்த அரசு அலுவலா்களின் வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இளநிலை உதவியாளா் பணிக்கு 7 நபா்களுக்கும், கிராம நிா்வாக அலுவலா் பணிக்கு 3 நபா்களுக்கும் என மொத்தம் 10 நபா்களுக்கு அரசு பணிக்கான நியமன ஆணை வழங்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன், பணி நியமன ஆணைகளை வழங்கினாா். மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவயாளா் கவிதா(பொது), அலுவலக மேலாளா் ஹென்றி பீட்டா் ஜான்(நிா்வாகம்) ஆகியோா் உடனிருந்தனா்.