தென்காசி: தென்காசி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை சட்ட விரோதமாக மது விற்பனை செய்தகாக 62 போ் கைதுசெய்யப்பட்டுள்ளனா்.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுகுணாசிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் மாட்டு பொங்கலன்று காவல் துறையினா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது தொடா்பாக மாவட்டம் முழுவதும் 62 போ் கைதுசெய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 369 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.