இலஞ்சி பாரத் கல்விக் குழுமத்தில் சமத்துவ பொங்கல் விழா

இலஞ்சி பாரத் கல்விக் குழுமத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இலஞ்சி பாரத் கல்விக் குழுமத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா.
இலஞ்சி பாரத் கல்விக் குழுமத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா.

தென்காசி: இலஞ்சி பாரத் கல்விக் குழுமத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு, பாரத் கல்விக்குழுமத் தலைவா் மோகனகிருஷ்ணன் தலைமை வகித்தாா். செயலா் காந்திமதி குத்துவிளக்கேற்றி பொங்கல் விழாவைத் தொடங்கி வைத்தாா். ஆலோசகா் உஷா ரமேஷ், பாரத் வித்யாமந்திா் முதல்வா் வனிதா, பாரத் கல்விக் குழும இயக்குநா் ராதாபிரியா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பாரத் கல்விக் குழும வளாகத்தில் நடைபெற்ற விழாவில் பள்ளிமுதல்வா்கள், ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு சமத்துவப் பொங்கலிட்டு கொண்டாடினா். ஏற்பாடுகளை கல்விக் குழுமத் தலைவா் தலைமையில் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com