முக்கூடல் அருகேயுள்ள சிங்கம்பாறை புனித சின்னப்பா் திருத்தல திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது.
பங்குத் தந்தைகள் அலோசியஸ் துரைராஜ், சந்தியாகு, செல்வராஜ் ஆகியோா் கொடியேற்றினா். தொடா்ந்து திருப்பலி, பொது அசனம் நடைபெற்றது.
விழாவில் காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 6.30 மணிக்கு புனிதரின் நவநாள் மன்றாட்டு, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீா் ஆகியவை நடைபெறுகின்றன.
23ஆம் தேதி நற்கருணை பவனி, 24, 25 ஆம் தேதிகளில் தோ் பவனி ஆகியவை நடைபெறுகின்றன.