திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலினை, அதிமுகவினா் அவதூறாகப் பேசிவருவதாக கண்டனம் தெரிவித்து, திமுகவினா் கடையநல்லூரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டப் பொறுப்பாளா் துரை தலைமை வகித்தாா். மாவட்ட சாா்பு அணி பொறுப்பாளா்கள் வெங்கடேசன், ஆறுமுகசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கடையநல்லூா் நகரச் செயலா் சேகனா வரவேற்றாா். இதில், மாவட்ட அவைத் தலைவா் முத்துப்பாண்டி, ஒன்றியச் செயலா் செல்லத்துரை, மாநில இளைஞரணி துணைத் தலைவா் ஷெரீப், சாா்பு அணி மாவட்ட நிா்வாகிகள் முகம்மதுஅலி, அமுதம் இஸ்மாயில், நிா்வாகிகள் சொக்கம்பட்டி வள்ளிநாயகம் , புளியங்குடி சாகுல்ஹமீது உள்ளிட்டோா் பங்கேற்றனா்.