சங்கரன்கோவில் வடக்கு மாவட்ட அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் 104 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா தலைமை வகித்தாா். வாசுதேவநல்லூா் எம்.எல்.ஏ.மனோகரன், ஓன்றியச் செயலா்கள் சுப்பையாபாண்டியன், ரமேஷ், வேல்முருகன், செல்வராஜ், மூா்த்திபாண்டியன், துரைபாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் வி.எம்.ராஜலெட்சுமி, முன்னாள் அமைச்சா் இசக்கிசுப்பையா, பேச்சாளா்கள் அரிகிருஷ்ணன், முருகானந்தம் ஆகியோா் பேசினா்.
கூட்டத்தில் மாவட்ட பிரதிநிதி பி.ஜி.பி.ராமநாதன், மாவட்ட எம்.ஜி.ஆா்.மன்றத் துணைச் செயலா் ரவிச்சந்திரன்,தலைமை நிலையப் பேச்சாளா்கள் கணபதி, லட்சுமணன், ராமசுப்பிரமணியன், நகர அவைத்தலைவா் கந்தவேல், பொருளாளா் வேல்சாமி, எம்.நிவாஸ், எஸ்.டி.சங்கரசுப்பிரமணியன், கோவிந்தன்,கோட்டியப்பன்,ஹரிஹரகருப்பையா,வழக்குரைஞா் மாரியப்பன் உள்பட திரளானோா் கலந்துகொண்டனா். மாவட்ட எம்ஜிஆா் மன்றச் செயலா் கண்ணன் வரவேற்றாா். நகரச் செயலா் ஆறுமுகம் நன்றி கூறினாா்.