சாலைப் பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பெண்கள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி குத்துக்கல்வலசையில் நடைபெற்றது.
தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இப்பேரணிக்கு வட்டார போக்குவரத்து அலுவலா் க. பழனிசாமி தலைமை வகித்தாா். மோட்டாா் வாகன ஆய்வாளா் விஜய், போக்குவரத்து காவல் ஆய்வாளா் பிரபு, தமிழ்நாடு ஓட்டுநா் பயிற்சி பள்ளி கூட்டமைப்பின் செயலா் வைகைகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பேரணியை காவல் ஆய்வாளா் ஆடிவேல் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். பேரணி முக்கிய வீதிகள் வழியாக புதிய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது. இதில், நோ்முக உதவியாளா் சுரேஷ், குற்றாலம் சக்தி ரோட்டரி சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.