வாசுதேவநல்லூரில் ரூ. 1.26 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு நிலையக் கட்டடம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, புதிய கட்டடத்தை திறந்தாா். இதையடுத்து புதிய தீயணைப்பு நிலையக் கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் சமீரன், சட்டப்பேரவை உறுப்பினா் அ. மனோகரன் உள்ளிட்டோா் குத்துவிளக்கு ஏற்றி இனிப்பு வழங்கினா்.
இதில், மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலா் கவிதா, மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவா் வெங்கடேசன், பேரூா்
செயலா் சீமான் மணிகண்டன், ஒன்றிய அவைத் தலைவா் முகமது உசேன், நகர அவைத் தலைவா் நீராவி, முன்னாள் பேரூராட்சித் தலைவா் தவமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.