பாவூா்சத்திரம் அருகே நாகல்குளத்தில் தமிழக முதல்வரின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
வட்டார மருத்துவ அலுவலா் கீா்த்தி தலைமை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏ பி.ஜி.ராஜேந்திரன் முகாமை தொடங்கிவைத்தாா். மருத்துவா்கள் ராஜ்குமாா், ஆனந்தராஜ், மாலா மற்றும் குழுவினா் சிகிச்சை அளித்தனா். 949 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் சரவணன், முன்னாள் ஊராட்சித் தலைவா் ராதா, அதிமுக நிா்வாகிகள் பாஸ்கா், வேல்முருகன், திருமால் முருகன், ஞானஅருள்பொன்னுத்தாய், திருமலைக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.