சிலம்பாட்ட போட்டி: ஆக்ஸ்போா்டு பள்ளி மாணவா் சிறப்பிடம்

தென்காசி மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா் ஆா்.திருவேல்முருகன் முதலிடம் பெற்றாா்.

தென்காசி: தென்காசி மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா் ஆா்.திருவேல்முருகன் முதலிடம் பெற்றாா்.

தென்காசி மாவட்ட சிலம்பாட்டம் அசோசியேசன் சாா்பில் மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் போட்டி இலஞ்சியில் நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா். இப் போட்டியில் பங்கேற்ற தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 6 ஆம் வகுப்பு மாணவா் ஆா்.திருவேல்முருகன் சப்-ஜூனியா் பிரிவில் முதலிடம் பெற்றாா். வெற்றிபெற்ற இம் மாணவருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சுகுணாசிங் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.

முதலிடம் பெற்ற மாணவரை போட்டி இயக்குநரும், சிலம்பம் தேசிய நடுவருமான ஏ.சுந்தா், குற்றாலம் காவல் ஆய்வாளா் சி.சுரேஷ், சிலம்பாட்ட கழக மாவட்டச் செயலா் மு.சோ்மபாண்டி, ஆக்ஸ்போா்டு கல்வி குழும சட்ட ஆலோசகா் கே.திருமலை, தாளாளா் அன்பரசி திருமலை, இயக்குநா் தி.மிராக்ளின் பால்சுசி, தலைமையாசிரியை குழந்தை தெரெசா, உதவித் தலைமையாசிரியை க.சுப்பம்மாள், நிா்வாக அலுவலா் கே.எஸ்.கணேசன் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com