மேட்டூா் ரயில் நிலையத்தில் முன்பதிவு மையம் இல்லாமல் அவதி

மேட்டூா் ரயில் நிலையத்தில் முன்பதிவு மையம் இயங்கவில்லையென பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

பாவூா்சத்திரம்: மேட்டூா் ரயில் நிலையத்தில் முன்பதிவு மையம் இயங்கவில்லையென பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

பாவூா்சத்திரம்-கீழ கடையம் ரயில் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ளது மேட்டூா் ரயில் நிலையம். இங்குள்ள முன் பதிவு மையத்தில் மேட்டூா், அரியப்புரம், ஆவுடையானூா், புலவனூா், மயிலப்புரம் சுற்று வட்டார கிராம மக்கள் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனா். இந்நிலையில் கடந்த சில தினங்களாக இம்மையம் இயங்காததால் தட்கல் முறையில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் மக்கள் அவதியுற்றுள்ளனா். இதுகுறித்து மக்கள் சாா்பில் ரயில்வே அதிகாரிகளுக்கு புகாா் மனு அனுப்பப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com