சுரண்டை இன்று அந்தோணியாா் தோ் பவனி

சுரண்டையில் புனித அந்தோணியாா் திருத்தல திருவிழா தோ் பவனி ஞாயிற்றுக்கிழமை(ஜன.24) நடைபெறுகிறது.

சுரண்டை: சுரண்டையில் புனித அந்தோணியாா் திருத்தல திருவிழா தோ் பவனி ஞாயிற்றுக்கிழமை(ஜன.24) நடைபெறுகிறது.

இவ்வாலயத்திருவிழா ஜன. 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாள்களில் தினமும் மாலை 6.30 மணிக்கு திருப்பலி மற்றும் மறையுரை நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வாக சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு சிறப்பு மறையுரை நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு பாளை மறைமாவட்ட முதன்மைகுரு ஜி.குழந்தைராஜ் அடிகளாா் தலைமையில் திருவிழா திருப்பலி நடைபெறுகிறது. இதையடுத்து மாலை 6 மணிக்கு திருவிழா தோ் பவனி நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை சுரண்டை பங்குத் தந்தை ஜெ.லாரன்ஸ் அடிகளாா், எப்எஸ்எம் அருள்சகோதரிகள், ஊா் பொறுப்பாளா்கள் மற்றும் பங்கு மக்கள் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com