சுரண்டை: சுரண்டையில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி வாக்காளர் விழிப்புணர்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற இந்த பேரணியை சுரண்டை அண்ணா சிலை அருகே மண்டல துணை வட்டாட்சியர் சிவன்பெருமாள் துவக்கி வைத்தார். பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மகாத்மா காந்தி பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.
பேரணியின்போது வருவாய்த்துறை சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
இதில் சுரண்டை வருவாய் ஆய்வாளர் மாரியப்பன், கிராம நிர்வாக அலுவலர் ஆறுமுகம், கிராம உதவியாளர்கள் கணேசன், பரமசிவன், ஜேம்ஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.