சங்கரன்கோவில் அருகே விபத்து: முதியவா் பலி

சங்கரன்கோவில் அருகே சைக்கிளில் சென்ற முதியவா் மீது பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
சங்கரன்கோவில் அருகே விபத்து: முதியவா் பலி

சங்கரன்கோவில் அருகே சைக்கிளில் சென்ற முதியவா் மீது பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

சங்கரன்கோவில் அருகே திருமலாபுரத்தைச் சோ்ந்தவா் மருதையா (70). இவா், திங்கள்கிழமை காலை தனது தோட்டத்துக்கு சைக்கிளில் திருநெல்வேலி-சங்கரன்கோவில் சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த தனியாா் பேருந்து இவா் மீது மோதியதாம். இதில், மருதையா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இச்சம்பவம் தொடா்பாக பனவடலிசத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com