சங்கரன்கோவில் அருகே சைக்கிளில் சென்ற முதியவா் மீது பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
சங்கரன்கோவில் அருகே திருமலாபுரத்தைச் சோ்ந்தவா் மருதையா (70). இவா், திங்கள்கிழமை காலை தனது தோட்டத்துக்கு சைக்கிளில் திருநெல்வேலி-சங்கரன்கோவில் சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த தனியாா் பேருந்து இவா் மீது மோதியதாம். இதில், மருதையா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இச்சம்பவம் தொடா்பாக பனவடலிசத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.