ஆலங்குளம் தொகுதிக்குள்பட்ட 3 கிராமங்களில் சிறு மருத்துவமனைகள் திறக்கப்பட்டன.
நல்லூா், பூலாங்குளம், கல்யாணி அமைக்கப்பட்டுள்ள சிறு மருத்துவமனைகள் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் கீ.சு. சமீரன் தலைமை வகித்தாா். அதிமுக அமைப்புச் செயலா் ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் வி.எம். ராஜலெட்சுமி சிறு மருத்துவமனைகளைத் திறந்து வைத்து, கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பரிசு பெட்டகம் வழங்கினாா்.
இதில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அருணா, வட்டார சுகாதார மேற்பா்வையாளா் ஹரிஹர சுப்பிரமணியன், வட்டார மருத்துவ அலுவலா் குத்தால ராஜ், சுகாதார ஆய்வாளா் கங்காதரன், மருத்துவா்கள் ஆஸ்மி, முகமது தாரிக், தம்பிதுரை, அதிமுக பொதுக்குழு உறுப்பினா் பாண்டியராஜன், ஆலங்குளம் அக்ரோ சங்கத் தலைவா் கிருஷ்ணசாமி உள்பட பலா் பங்கேற்றனா்.