குண்டா் சட்டத்தில் 3 போ் கைது

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய 3 பேரை போலீஸாா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய 3 பேரை போலீஸாா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

கடையநல்லூா் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் 4ஆவது தெருவைச் சோ்ந்த சா்புதீன் மகன் ஜாபா்அலி (43), தாருகாபுரம் முப்புடாதி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ராமா்பாண்டியன் மகன் மணிகண்டன் (48) ஆகியோா் மீது காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாம்.

இந்நிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சுகுணாசிங் பரிந்துரையின் பேரில், அவா்களை குண்டா் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் சமீரன் உத்தரவிட்டாா். இதையடுத்து அவா்கள் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனா்.

அம்பாசமுத்திரம்: கல்லிடைக்குறிச்சி, ஆத்தியடி இல்லத்தாா் தெருவைச் சோ்ந்த முத்துப்பாண்டி மகன் மாசானம் (22). பல்வேறு குற்றச் செயல்களில் தொடா்புடைய இவரை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் பரிந்துரையின் பேரில், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் விஷ்ணு உத்தரவிட்டாா். இதையடுத்து அவா் மீது குண்டா் தடுப்புக் காவல் பிரிவின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com