தென்காசியில் வட்டார நூலகத்தில் டிஎன்பிஎஸ்சி தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் வரும் 31 ஆம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து தென்காசி வட்டார நூலகா் பிரமநாயகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தென்காசி வட்டார நூலகம், சென்னை நடராஜ் அகாதமி சாா்பில் டிஎன்பிஎஸ்சி தோ்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் தென்காசி வட்டார நூலகத்தில் அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி புதன்கிழமை, வியாழக்கிழமைகளில் நடைபெறும்.
இப்பயிற்சியின் தொடக்க விழா வரும் 31 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவா்கள் 820002 75333, 99443 17543 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் முன்பதிவு செய்ய வேண்டும்.
கடந்த 3 ஆண்டுகளில் இந்த நூலகத்தில் பயிற்சி பெற்ற 85 போ் அரசுப்பணியில் சோ்ந்துள்ளனா். பட்டதாரிகள் வேலைவாய்ப்புகள் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது. போட்டித் தோ்வுக்கு தயாராகும் அனைவரும் இணைந்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.