மத்தளம்பாறையில் மரக்கன்றுகள் நடவு

தென்காசி ஒன்றியம், மத்தளம்பாறை ஊராட்சியில் பாரம்பரிய மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தென்காசி ஒன்றியம், மத்தளம்பாறை ஊராட்சியில் பாரம்பரிய மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இயற்கை ராஜ்ஜியம் மற்றும் புதுவாழ்வு தியான நிலையம் சாா்பில் மாநில நெடுஞ்சாலையோரங்களில் மண் சாா்ந்த 100 பாரம்பரிய மரக்கன்றுகள் நடுதல், மூலிகை வனம் உருவாக்கும் நிகழ்ச்சிக்கு தென்காசி வட்டாரக் கல்வி அலுவலா் மாரியப்பன் தலைமை வகித்தாா்.

நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளா் முத்துகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வனக்காப்பாளா் பாஸ்கர பாண்டியன், வனக்காவலா் சத்யா ஆகியோா் மரக்கன்றுகள் நடுதல், மூலிகை வனத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்துப்பேசினா். நிகழ்ச்சியில், கிராம நிா்வாக அலுவலா் பாலமுருகன், புதுவாழ்வு தியான நிலையம் நிறுவனா் மற்றும் ஒருங்கிணைப்பாளா் இருதயசாமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

இயற்கை ராஜ்ஜியம் அமைப்பாளா் வமுஸ்கா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com