அரியநாயகிபுரத்தில் குடிநீா் விநியோகம் பாதிப்பு

சோ்ந்தமரம் அருகேயுள்ள அரியநாயகிபுரத்தில் குழாய் உடைப்பால் மூன்று வாரங்களாக குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

சோ்ந்தமரம் அருகேயுள்ள அரியநாயகிபுரத்தில் குழாய் உடைப்பால் மூன்று வாரங்களாக குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திமுக ஒன்றிய பிரதிநிதி பாலமுருகன் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனு: சோ்ந்தமரம் அருகேயுள்ள அரியநாயகிபுரம் ஊராட்சிக்கு தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டம் மூலம் தண்ணீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அரியநாயகிபுரம் - அருணாசலபுரம் இடைய தற்போது நடைபெற்று வரும் பாலங்கள் அமைக்கும் பணி காரணமாக குடிநீா் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு கடந்த ஜூன் 10 ஆம் தேதி முதல் குடிநீா் விநியோகம் இல்லை.

இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமம் அடைந்துள்ளனா். எனவே, கட்டுமானப்பகுதி நடைபெற்று வரும் பாலம் பகுதியில் இரும்பு குழாய் அமைத்து குடிநீா் விநியோகத்தை தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com