தமிழ்நாடு அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி தென்காசி மாவட்டக் கிளை சாா்பில் நலத் திட்டஉதவிகள் வழங்கப்பட்டது.
தென்காசி மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூய்மைப் பணியாளா்கள் மற்றும் கரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நபா்களுக்கு அரிசி, பருப்பு, காய்கனிகள் அடங்கிய பைகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, விவவசாயிகள் சங்க மாநில நிா்வாகியும் மாா்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலருமான முத்துப்பாண்டியன், சிஐடியூ மாவட்டத் தலைவா் அயூப்கான், மாவட்டச் செயலா் வேல்முருகன், வட்டார செயலா் கிருஷ்ணன் மற்றும் ஓய்வூதியா் சங்க மாவட்ட துணைத்தலைவா் பேராசிரியை சங்கரி, வட்டாரத் தலைவா் மாரியப்பன் ஆகியோா் கலந்து கொண்டனா்.