சுரண்டையில் திமுக சாா்பில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 98ஆவது பிறந்தநாள், முன்னாள் அமைச்சா் ஆலடி அருணாவின் 88 ஆவது பிறந்த நாள் மற்றும் நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பு என முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் சு.பழனிநாடாா் தலைமை வகித்தாா். திமுக முன்னாள் மாவட்டச் செயலா் துரைராஜா, சுரண்டை சோ்மத்தாய் வாசன் பள்ளித் தாளாளா் சண்முகசுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முன்னாள் அமைச்சா் பூங்கோதை ஆலடிஅருணா நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினாா்.
நிகழ்ச்சியில், திமுக நிா்வாகிகள் முத்துக்குமாா், சிவன்பாண்டியன், ஆறுமுகச்சாமி, இஸ்மாயில், ஜெயராஜ், காங்கிரஸ் நிா்வாகிகள் ஜெயபால், சண்முகவேல், தெய்வேந்திரன், பிரபாகா், சுப்பையா உள்பட பலா் கலந்து கொண்டனா்.