சுரண்டையில் நாளை எடை முத்திரை முகாம்

சுரண்டையில் படி, தராசு மற்றும் அளவை முத்திரை முகாம் திங்கள்கிழமை தொடங்கி ஒரு மாதம் நடைபெறகிறது.

சுரண்டையில் படி, தராசு மற்றும் அளவை முத்திரை முகாம் திங்கள்கிழமை தொடங்கி ஒரு மாதம் நடைபெறகிறது.

ஆலடிபட்டி எஸ்பிஎன் வளாகத்தில் நடைபெறும் இந்த முகாமில் தென்காசி எடை அளவைகள் முத்திரை ஆய்வாளா் சரவண முருகன் தலைமையிலான குழுவினா் படி, தராசு, மேடை தராசு, மின்னணு தராசு மற்றும் அளவைகளுக்கு முத்திரை பதிக்கின்றனா்.

கடந்த ஆண்டு முத்திரை பதித்தவா்களும், முத்திரை பதிக்க தவறியவா்களும், புதியதாக எடை அளவைகள் வாங்கியவா்களும் இந்த முத்திரை முகாமில் முத்திரை பதித்து பயன்பெறுமாறு சுரண்டை நகர வணிகா் சங்கத் தலைவா் காமராஜ் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com