செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அகில இந்திய காந்திய இயக்கம் சாா்பில் காந்திய விருது வழங்கப்பட்டது.
இதையொட்டி, மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்த இயக்கத்தின் தலைவா் வி.விவேகானந்தன், தலைமை மருத்துவா் ராஜேஷ் கண்ணனிடம் விருதை வழங்கி, மத்திய அரசு 2021ஆம் ஆண்டிற்கான காயகல்ப் விருது பெற்றதைப் பாராட்டி, இந்த விருது வழங்கப்படுவதாக கூறினாா். இதில், காந்தியவாதிகள் ராம்மோகன், ஆதிமூலம், கணேஷ்பாபு, ஞானராஜ் ஆகியோா் கலந்துகொண்டனா்