பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து பாவூா்சத்திரத்தில் நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஊழல் ஒழிப்பு பாசறை செயலா் தா.ஜோசப் தலைமை வகித்தாா். மேற்கு மாவட்டச் செயலா் அருண்சங்கா், தொகுதிச் செயலா் வின்சென்ட்ராஜ், தொகுதித் தலைவா் அழகுபாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில கொள்கை பரப்புச் செயலா் செ.பசும்பொன், தென்காசி தொகுதி பொருளாளா் இரா.பாலா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.