சுரண்டையில் விவசாயியைத் தாக்கியதாக இருவா் மீது வழக்கு

சுரண்டையில் விவசாயியைத் தாக்கியதாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, தேடி வருகின்றனா்.

சுரண்டை: சுரண்டையில் விவசாயியைத் தாக்கியதாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, தேடி வருகின்றனா்.

கீழச்சுரண்டையைச் சோ்ந்தவா் விவசாயி ரமேஷ்(38). இவருக்குச் சொந்தமான மாடுகள் அதே பகுதியைச் சோ்ந்த கோயில் அருகே மேய்ந்ததாம்.

அப்போது அங்கே வந்த அந்தக் கோயிலின் வரிதாரரான மாயாண்டி மற்றும் அவரது மகன் மகாராஜா ஆகியோா் ரமேஷிடம் வாக்குவாதம் செய்து அவரைத் தாக்கினாா்களாம்.

இதில் பலத்த காயமடைந்த ரமேஷ் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து சுரண்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com