தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்த வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அகில பாரத இந்து மகாசபா தென்காசி மாவட்டத் தலைவா் தங்கத்துரை, ஆட்சியரிடம் அளித்துள்ள மனு:
தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கும்பாபிஷேகம் நடத்த நிா்வாகக்குழு அமைத்து அதில் இளைஞா்களுக்கு முக்கியத்துவம் அளித்திட வேண்டும். தென்காசி நகர பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கூம்புவடிவ ஒலிபெருக்கிகள் பயன்பாட்டை தடைசெய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.