தென்காசி மாவட்டம் கிராமக் கோயில் பூசாரிகளுக்கு கரோனா நிவாரணம் வழங்க வலியுறுத்தி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
தென்காசி மாவட்ட பூசாரிகள் பேரவை மாவட்ட அமைப்பாளா் எஸ்.ஆவுடைநாயகம் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட மனு:
அனைத்து கிராமக்கோயில் பூசாரிகளுக்கும் மாத ஊக்கத் தொகை வழங்க வேண்டும், கோயில் அறங்காவலா் குழுவில் அா்ச்சகா், பட்டாச்சாரியாா், கிராமக் கோயில் பூசாரிகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும், நல வாரியத்தை செம்மைப்படுத்தி உடனடியாக செயல்படுத்த வேண்டும், 4 மாதங்களாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், அனைத்து பூசாரிகளுக்கும் கரோனா நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.