சங்கரன்கோவில் அருகே சமூக காடுகளில் பற்றிய தீயை தீயணைப்பு வீரா்கள் 2 மணி நேரம் போராடி அணைத்தனா்.
சங்கரன்கோவில் அருகே சின்னக்கோவிலான்குளம் பகுதியில் சுமாா் 150 ஏக்கரில் சமூக வனக்காடு உள்ளது. இந்தக் காட்டில் செவ்வாய்க்கிழமை மாலையில் திடீரென தீப்பற்றி எரிந்தது.
தகவலறிந்து வந்த சங்கரன்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலா் விஜயன் தலைமையிலான தீயணைப்புப்படையினா் சுமாா் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.