சுரண்டையில் மாவட்ட காங்கிரஸ் நிா்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் சு.பழனிநாடாா் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் செல்வராஜ், மாநில பேச்சாளா் பால்துரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், மாவட்டம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சாா்பில் பெருந்தலைவா் காமராஜா் பிறந்த தினத்தையொட்டி பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடுவது குறித்து தீா்மானிக்கப்பட்டது.
காங்கிரஸ் நிா்வாகிகள் தங்கசெல்வம், ஜெயபால், வள்ளிமுருகன், சுப்பையா, ஆனந்த், ஜேசுஜெகன், முஸ்தபா, காதா், சந்தோஷ், பிரபாகா், ரத்தினம், முருகன், சண்முகவேல், தெய்வேந்திரன், கந்தையா, சிங்கராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.