தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அழகு பூச்செடிகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்காசி சாந்தி மருத்துவமனை நிா்வாக இயக்குநா் மருத்துவா் தமிழரசன் 800 பூச்செடிகளை தென்காசி மருத்துவமனைக்கு வழங்கினாா். மருத்துவமனை முகப்பு சாலையில் பூச்செடி கன்றுகள் நடப்பட்டன. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பாக தென்காசி எக்ஸோனரா அமைப்பின் மூலம் 300 பூச்செடிகள் ஏற்கனவே நடப்பட்டன.
நிகழ்ச்சியில், மருத்துவா் தமிழரசன், சுமதி ஜெஸ்லின், மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் மருத்துவ பணியாளா்கள் கலந்துகொண்டனா்.
ஏற்பாடுகளை எக்ஸ்னோரா செயலா் சங்கரநாராயணன் செய்திருந்தாா்.
மருத்துவமனை கண்காணிப்பாளா் மருத்துவா் ஜெஸ்லின் நன்றி கூறினாா்.