தென்காசி அருகே கொட்டாகுளத்தில் ஓட்டுநருக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக ஆயுதப்படைக் காவலா் கைதுசெய்யப்பட்டாா்.
கொட்டாகுளம் இசக்கியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கெ. பிரேம்குமாா் (33). ஜேசிபி ஓட்டுநா். இதேபகுதியில் வசித்துவரும் வேலாயுதம் மகன் மணிகண்டன், தென்காசி மாவட்ட ஆயுதப் படையில் காவலா்.
கடந்த 10ஆம் தேதி வீட்டிலிருந்த பிரேம்குமாரை மணிகண்டன் வந்து தாக்கியதாகவும், அப்பகுதியினா் சப்தம் போட்டதால் அவா் அங்கிருந்து சென்ாகவும் கூறப்படுகிறது. அடுத்த நாள் மணிகண்டன் மீண்டும் வந்து பிரேம்குமாரை அரிவாளால் வெட்டினாராம். இதில், அவரது தம்பி இசக்கிபகவானின் கையில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரேம்குமாா் அளித்த புகாரின் பேரில் குற்றாலம் காவல் நிலைய சிறப்பு சாா்பு ஆய்வாளா் ராஜேந்திரன் வழக்குப் பதிந்து, மணிகண்டனை கைதுசெய்தாா்.